நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
Welcome to Sindoor Waves, where tradition meets modern vibes! Dive into a vibrant blend of Indian culture, lifestyle, beauty, and heartfelt stories. From festive inspirations to everyday elegance, our channel celebrates the colors and rhythms of life. Join us for a journey that flows like waves and sparkles with sindoor’s timeless charm! https://www.youtube.com/@sindoorwaves Suggestiions to email: vselvaraj@vselvaraj.com
Subscribe to:
Post Comments (Atom)
நீ மனதால் அழகு, உள்ளம் தான் பெரியது
நீ மனதால் அழகு, உள்ளம் தான் பெரியது, தோற்றத்தை வைத்து மனிதனை நீ அளவிடல் ஆகாது! கண்ணுக்கு தெரிவது மாயை, உண்மை அல்லவே, நல்ல மனம் இருந்தால்...
-
முருகா முருகா முருகா சரஹணபவ.. கள்ளம் கபடம் இல்லா உள்ளம் தா முருகா வேலவா வேல் முருகா வந்தேன் உன் பாதமலர் அருள் தருவாய் ஆறுமுகா அடியேன் உனைத் ...
-
முருகா முருகா முருகா சரஹணபவ.. மருதமலை முருகனே, மயிலேறி வருவாயே, சஷ்டி நாளில் அருள் தருவாய், சரணம் உனை அடைவேன்! வேல் முருகா, வெற்றி தருவாய், ...
-
இந்த நேரம் எங்கோ மழை பொழிகின்றது இதே நேரம் எங்கோ வெயில் சுடுகின்றது செடியில் எங்கோ மலர் துளிர்க்கின்றது புயலில் எங்கோ மரம் விழுகின்றது!...

No comments:
Post a Comment