நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?


நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி - நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையறு மனங்கேட்டேன் - நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், தசையினைத் தீசுடினும் - சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன் - இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?



No comments:

Post a Comment

சிவன் அருளாகி நின்றான், அன்பின் உருவாகி நின்றான் பரம்பொருள் ஞான நாதன், என்னுடன் ஒன்றாக மருவினான்....

சிவன் அருளாகி நின்றான், அன்பின் உருவாகி நின்றான் பரம்பொருள் ஞான நாதன், என்னுடன் ஒன்றாக மருவினான் சிவன் பரமாகி நின்றான், ஆன்மாவில் கலந்த...